வெள்ளி, 12 ஜூலை, 2019

ஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள்

முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, பதவிகளை துறந்த முஸ்லிம் அரசியல் வாதிகள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க தீர்மானித்துள்ளனர்.

அடுத்தவாரம் அவர்கள் தமது, அமைச்சுக்களை மீள ஏற்பார்கள் எனவும் நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறிய வருகிறது.
பதவிகளை துறந்தவாகளில் ஒருவரைத் தவிர, ஏனைய சகலரும் தமது பதவிகளை மீள ஏற்கவுள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே பதவியை பாரமெடுப்பதில்லை என்ற உறுதிப்பாட்டுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக