வியாழன், 11 ஜூலை, 2019

ஞானசார தேரரின் மன்னிப்பை இரத்து செய்யக் கோரிய மனு செப்டம்பர் 10 விசாரிக்க தீர்மானம்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பை இரத்து செய்யக் கோரி, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துகொள்ள உச்சநீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழுவே இந்த வழக்கை செப்டம்பர் 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதிபதி பிரசன்ன ஜயவர்தன மற்றும் நீதிபதி எல்.டி.பி தெஹிதெனிய ஆகியோரே இத்தீர்மானத்தை அறிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக