றிசாத் பதியுத்தீன் அமைச்சிப் பொறுப்பினை மீள பாரமெடுத்தால் சிகல உருமைய கட்சியின் பா.உ அத்துரலெலிய ரத்தின தேரர் தூக்கிலிட்டு தொங்குவேன் என ஊடகங்களில் சொல்லியிருந்தால் - அவர் அணிந்திருக்கும் பௌத்த சீருடைக்கும், இந்த நாட்டின் பௌத்த மத்தித்திற்கும் இழைக்கும் பாரியதொரு குற்றமாகும். உடனடியாக பொலிசார் அவரை கைது செய்து அவரை பாதுகாக்கவேண்டும்.
தூக்கில் தொங்குவேன் என சொல்லியிருந்தால் கூட அது பாரதூரமான குற்றமாகும். என நேற்று (13) மட்டக்குழிய சேர்
ராசிக் பரீட் பாடசாலையின் நடைபெற்ற வைபவத்தின் பின்னர் - ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கே பாராளுமன்ற உறுப்பிணர் முஜிபு ரகுமான் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் அங்கு தெரிவித்தாவது,
முஸ்லிம் அமைச்சர்கள் மீள அமைச்சுக்களை பாரம் எடுப்பின் பின்வரிசை ஐ.தே.கட்சி உறுப்பிணர்கள் எதிர்ப்பு எனவும் ஊடகங்களில் சொல்லப்பட்டிருந்தது. அவ்வாறு ஒருபோதும் பின்வரிசை உறுப்பிணர்கள் எவ்வித முடிவுகளும் எடுக்க வில்லை. முஸ்லிம் அமைச்சர்கள் - தான் சாந்த சமுகத்திற்கும் நாட்டுக்கும் மக்களுக்கும் மீள சேவையாற்ற முடியும் அவர்கள் ஒரு மாத காலக்கெடு கொடுத்தே தமது பதவிகளை துறந்தார்கள்அவர்கள் மேற்படி தாக்குதலில் எவ்வித குற்றமும் இழைக்கவில்லை.
அதனையே பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கும் மற்றும் குற்றப் பிரிவு பொலிஸாருக்கும் தெளிவுபடுத்தியுள்ளாரகள் சில வக்குரோத்து இனவாத அரசியல் வாதிகள் வேண்டுமென்று இவ் அரசினை குழப்புவதற்கும் அவர்கள் திட்டமிட்ட சதிகளுக்கும் மேற்படி தாக்குதலை வைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பிணர்கள் மற்றும் முஸ்லீம்கள் மீது பழி சுமத்தினார்கள். இது அவர்ககளது அரசியல் உள்நோக்கமே அது பழிக்கவில்லை.என பாராளுமன்ற உறுப்பிணர் முஜிபு ரகுமான் கருத்து தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக