ஞாயிறு, 14 ஜூலை, 2019

இராணுவத்தின் கப் கவிழ்ந்ததில் சிப்பாய் ஒருவர் பலி 8 பேர் படுகாயம்

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத்தலையகம் அமைந்துள்ள பகுதியில் இன்று காலை (14) இடம்பெற்ற விபத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 8 சிப்பாய்களும் படுகாயமடைந்துள்ளனர்.
இராணுவ முகாம் அமைந்துள்ள வீதியின் வளைவு ஒன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்தே இந்த கப் ரக வாகனம் கவிழ்ந்தது.
அதில் பயணம் செய்த இராணுவத்தினரில் ஒருவரே பலியாகினார். அதில் பயணித்த 8 பேர் படுகாயங்களுடன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (Jazi)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக